புதிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பின்னணி என்ன?
Jun 22, 2026, 03:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பின்னணி என்ன?

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக இருக்கும் விக்ரம் மிஸ்ரியைப் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக மத்திய அரசு அரசு நியமித்துள்ளது. விக்ரம் மிஸ்ரி, வரும் ஜூலை 15 ஆம் தேதி பதவியேற்கிறார். யார் இந்த விக்ரம் மிஸ்ரி ? என்ன பின்னணி என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ராவுக்கு, கடந்த மார்ச் 12ம் தேதி ஆறு மாத பதவி கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது விக்ரம் மிஸ்ரியை புதிய வெளியுறவு செயலாளராக மத்திய அரசு நியமித்துள்ளது.

1989 பேட்ச்சை சேர்ந்த இந்திய வெளியுறவு துறை அதிகாரியான (IFS) 59 வயதான மிஸ்ரி, ஐ கே குஜ்ரால், மன்மோகன் சிங், மற்றும் பிரதமர் மோடி என இந்தியாவின் மூன்று பிரதமர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய சிறப்பை பெற்றவர்.

ஐ.கே குஜ்ரால் காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி இருக்கிறார்.பின்னர் ஐ.கே குஜ்ரால் பிரதமரான போது அவருக்குத் தனிச் செயலராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார்.

2006 நவம்பர் முதல் 2008 செப்டம்பர் வரை இந்திய அணுசக்தி ஒப்பந்தம் பேச்சு வார்த்தைகள் நடத்தப பட்ட நேரத்திலும் வெளியுறவுத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் துணை செயலாளராக பணியில் இருந்திருக்கிறார்.

2012ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இணை செயலராக இருந்த விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மன்மோகன் சிங்கின் தனி செயலராக நியமிக்கப் பட்டார். அப்படியே தொடர்ந்து , 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் தனிச் செயலராக பதவி வகித்தார்.

1964 ஆண்டு ஸ்ரீநகரில் பிறந்த மிஸ்ரி, ஸ்ரீநகரில் பர்ன்ஹால் , காஷ்மீரில் கார்மல் மற்றும் குவாலியரில் சிந்தியா என பல்வேறு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.

பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், XLRI இல் MBA பட்டமும் பெற்றார் .

அரசு துறைக்கு பணிக்கு வருவதற்கு முன் ஒரு விளம்பர நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய மிஸ்ரி, 1989ம் ஆண்டு வெளியுறவு பணியில் சேர்ந்து தூதராக பணியாற்றத் தொடங்கினார்.

முதலில் பிரஸ்ஸல்ஸ் மற்றும் துனிசியாவில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றிய மிஸ்ரி 2014 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கும், 2016ம் ஆண்டு மியான்மருக்கும் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

இலங்கை, பாகிஸ்தான், பெல்ஜியம் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய மிஸ்ரி , சீனாவுக்கான தூதராக இருந்த காலத்தில் தான் 2020 இல் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் உண்டானது. பிறகு இந்திய-சீனா பேச்சுவார்த்தைகளில் மிஸ்ரி முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் கொரொனா காலத்தில், கொரொனா தடுப்பூசி தொடர்பாக, சீன-இந்திய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்காக மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார் என்று பாராட்டப் படுகிறார் மிஸ்ரி.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றிய விக்ரம் மிஸ்ரி, இலங்கை பாகிஸ்தான், மியான்மர், அமெரிக்கா, சீனா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றிருக்கிறார்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ,மிஸ்ரி தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப் ட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

வெளியுறவுத் துறை செயலராக விக்ரம் மிஸ்ரியை நியமனம் செய்திருப்பது, இந்தியாவின் சரியான ராஜ தந்திர நடவடிக்கை என்று கருதப் படுகிறது.

Tags: What is the background of new Foreign Secretary Vikram Misri?
ShareTweetSendShare
Previous Post

இண்டிகோ Vs ஏர் இந்தியா குறையுமா விமானக் கட்டணம்?

Next Post

தென் ஆப்பிரிக்காவை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்..!

Related News

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies