நீட் தேர்வு என்பது ஒரு புரட்சி!- தமிழிசை சவுந்தரராஜன்!
Jul 3, 2026, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு என்பது ஒரு புரட்சி!- தமிழிசை சவுந்தரராஜன்!

Murugesan M by Murugesan M
Jul 4, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் பிள்ளைகள் கூட மருத்துவம் படிக்க முடியாது எனவும், இது கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து தான் இருக்கின்றது எனவும் திமுக மாணவர் அணியினர் நீட்டை எதிர்த்து போராடி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்டை எதிர்த்து தான் என்று கூறிய நிலையில் மக்களை ஏமாற்றும் செயல். என்றும் நீட்டைப் பற்றி தவறான கருத்து பரவ விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் முன்னால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது செல்வந்தர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிக மருத்துவம் படித்தனர்.

குறிப்பாக நாமக்கல் போன்ற மாவட்ட மாணவர்கள் மருத்துவத்துறையில் அதிகம் சேர்ந்தனர். தற்போது நீட்டிற்கு பின்பு அரியலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட மருத்துவத்தில் தேர்வாகின்றனர்.

நீட் பற்றி அரசியல்வாதிகள் தான் தவறான கண்ணோட்டத்தை பரவ விடுகின்றனர். தற்போது இரண்டு லட்சம் மாணவர்கள் நீட் எழுத உள்ளனர். நீட்டை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் தற்போது நடைமுறையில் உள்ளது.

எனவே மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் பயிற்சி கொடுக்க வேண்டும், பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்.  சாதாரண மாணவர்களுக்கு நீட் உதவி செய்கிறது.

மருத்துவக் கல்லூரி முதலாளிகள் கூட நீட் இல்லாமல் தங்கள் பிள்ளைகளை மருத்துவம் சேர்க்க முடியாது. இது ஒரு புரட்சி, மாணவர்கள் நீட்டை ஏற்றுக் கொள்கின்றனர்.

அதை அரசியல்வாதிகள் தான் ஏற்றுக் கொள்வதில்லை. திமுகவின் ஆர்.எஸ். பாரதி பேசினால் அதை சர்வ சாதாரணமாக விட்டு விடுவார்கள்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை விமர்சித்து மோசமான விமர்சனம் செய்வது திமுகவினரால் மட்டுமே முடியும்.

அனைத்து படிப்புகளுக்கும் மதிப்பு உண்டு, நான் படித்ததை அவர்கள் செய்த உதவி என்கின்றனர். அனைவருக்கும் திறமையுண்டு அனைத்திற்கும் உரிமை கொண்டாடக்கூடாது என தெரிவித்தார்.

Tags: NEET exam is a revolution!- Tamilisai Soundararajan!
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா போதையில் தள்ளாடும் இளைஞர்கள்! – நடவடிக்கை எப்போது?

Next Post

100 கிலோ ரசாயனம் தடவிய பச்சை பட்டாணி பறிமுதல்!

Related News

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies