புறக்கணிப்பால் கொந்தளிப்பு! - போராடும் பலுாச் மக்கள் அத்துமீறும் பாகிஸ்தான்!
Sep 14, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புறக்கணிப்பால் கொந்தளிப்பு! – போராடும் பலுாச் மக்கள் அத்துமீறும் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 02:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பலுசிஸ்தானின் பிரச்னைக்குரிய மாகாணமாக உள்ள பலுசிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து, அவர்களை ஒடுக்க ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலுசிஸ்தான். பலுச்சிஸ்தான் என்றால் ‘பலோச்சின் நிலம்’ என்று பொருள்படும். இதனால் பலூச் என்று அழைக்கப்படும் அதன் குடிமக்களின் பெயரால் அந்த மாகாணம் அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும் பலூச்சி மொழி பேசும் சன்னி முஸ்லிம்களே அதிகம் வாழ்கின்றனர். பாகிஸ்தானின் மொத்த பரப்பளவில் 44 சதவீதத்தை தன்னகத்தே கொண்ட பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும்.

ஆனால் பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் பத்து சதவீதத்திற்கும் குறைவான மக்களே பலுசிஸ்தானில் வசித்து வருகின்றனர்.

பலுசிஸ்தான், பாகிஸ்தானில் மிகவும் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றாகும். சொல்லப் போனால், பாகிஸ்தானில் மிகவும் பின்தங்கிய 20 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் பலுசிஸ்தானில்தான் உள்ளன .

பலுசிஸ்தானில் வாழும் மக்களில் 48 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர், மேலும் 88 சதவீத பலுசிஸ்தான் மக்கள் அதிக அளவில் வறுமையில் தவித்து வருகின்றனர்.

பலுசிஸ்தானின் மக்கள்தொகையில் 20 சதவீத மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்கிறது. மேலும் பலுசிஸ்தானில் 25 சதவீத கிராமங்களில் மட்டுமே மின்வசதி உள்ளது

பலுசிஸ்தானில் நான்கில் மூன்று பங்கு பெண்களும், பத்து வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த சூழலில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் மற்றும் சீன அரசுகள் சுரண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிக கனிம வளங்கள் நிறைந்திருந்தாலும், பலுசிஸ்தான் மக்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு, துயரத்திலும், கடும் வறுமையிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம் பாகிஸ்தானில் நடக்கும் பஞ்சாபி மற்றும் சிந்தி ஆதிக்கம் செலுத்தும் தேசிய அரசியல் தான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

பாகிஸ்தான் மக்கள் தொகையில் பலுசிஸ்தான் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பலுசிஸ்தானின் குரல் இஸ்லாமாபாத்தில் காதில் ஒருபோதும் கேட்கப்படவில்லை என்றும் , தேசிய அரசியலில், எப்போதும் ஓரங்கட்டப் படுவதாக பலூச் மக்கள் உணர்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் மாகாணமான இருக்கும் பலுசிஸ்தான் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்படுவதால் மக்கள் அரசுக்கு எதிராக தனி நாடு கோரிக்கையுடன் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

பலுசிஸ்தானின் குவாதர் துறைமுகத்தைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கிற்கான மாற்று வர்த்தகப் பாதையாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தைச் சீனா கருதுகிறது. இந்த திட்டம், பலுசிஸ்தானில் நீண்ட தொடர் போராட்டங்கள் மற்றும் சீனத் தொழிலாளர்கள் மீதான போராளிக் குழுக்களின் தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதையடுத்து. பாகிஸ்தான் ராணுவம் பலூச்சி மக்களைத் தீவிர வன்முறை மற்றும் இராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கி வருகிறது.

தங்கள் உரிமைகளுக்காக போராடும் பலூச்சி மக்களில் பலரைச் சட்டத்திற்குப் புறம்பாக பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் கொல்லப்படுகின்றனர். பலர் பலவந்தமாக காணாமல் போகிறார்கள். இராணுவத்தினரால் கடுமையான சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலானோர் மனித உரிமை மீறல்களுக்கு தொடர்ந்து உட்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த 17 ஆண்டுகளில் 15,000க்கும் மேற்பட்டோர் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கிட்டத்தட்ட 5 லட்சம் பலூச் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டை வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பலுசிஸ்தான் 227 நாட்களுக்கு ஒரு சுதந்திர நாடாக இருந்தது, பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்தது. 1948 இல் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியதில் இருந்து பலுசிஸ்தான் தொடர்ந்து வறுமையையும் வன்முறைகளையும் அமைதியின்மையையும் எதிர்கொண்டு வருகிறது.

பலூச் மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற விரும்புகின்றனர். தனித்துவமான இன அடையாளங்களுடன் ஒரு தனி அந்தஸ்து உடைய நாடாக உரிமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தங்களின் நியாயமான போராட்டத்தைச் சர்வதேச சமூகம் ஆதரிக்க வேண்டும் என்று பலுசிஸ்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags: Turmoil by neglect! - Fighting Baloch people are trespassing Pakistan!
Share
Tweet
SendShare
Previous Post

நிலச்சரிவு தொடர்பான கருத்துகளை வெளியிட வேண்டாம் என்ற உத்தரவு வாபஸ்!

Next Post

நைஜீரியா: விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies