தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம், ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா? ஹெச்.ராஜா கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைவர்களின் குழந்தைகள் ஆங்கிலம், ஹிந்தி கற்கலாம் ஆனால் ஏழைக்குழந்தைகள் மட்டும் தமிழ் படிக்க வேண்டுமா என  பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து, அவரது வழிகாட்டுதலை பெற்றோம். கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப் பட்டத்தை அடுத்து, அமித்ஷா அவர்களை சந்தித்தேன். கட்சியில் மாநில நிர்வாகிகள் பொறுப்பை மாற்றுவதில் என்ன அவசரம்?

6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜகவில் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை கட்சியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  புதிய உறுப்பினர் சேர்க்கை  நடைபெற்று வருகிறது. அதனை கடந்து தான் பொறுப்புகள் நியமிக்கப்படும்.

தமிழகத்தில் கல்விக் கொள்கை குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பதில் அளித்த H ராஜா, எப்போதும் அடுத்தவரின் சாதனைகளை தன் முதுகில் தட்டிக் கொள்வது திமுகவின் இயல்பு. . தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நிறைய வித்தியாசம் இருப்பது ஏன்? 1000 மேற்பட்ட அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை கூட தொடவில்லை ஏன்?

ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவனுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் 50 சதவிகிதம் கல்லூரியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதமும், 2 கல்லூரிகளில் 0 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் தான் உள்ளது. . துறை சார்ந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மொழி பேதங்களை உருவாக்கி பிற்போக்கு கொள்கையை செயல்படுத்துகிறார்கள்.

மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் என மாற்றியதே பிரதமர் மோடி ஆட்சி தான். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் 3 வது மொழி படித்தால் ஹிந்தி உள்ளே வந்துவிடும் என பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல குழந்தைகள் படிக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்தது விடுமோ என பயந்துகொண்டு படுகிறார்கள். மரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. ஆனால் PM shree திட்டம் மூலமாக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட பள்ளிக்கூடங்கள் வழங்கப்படுகிறது. அதனை ஏன் கொடுக்கவில்லை என பேசுவதற்கு பதில் நீங்கள் கையெழுத்து போடாததே தான். கையெழுத்து போடுங்கள் PM shree பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருகிறோம் என ஹெச். ராஜா தெரிவித்தார்.

Tags: PM Modih rajaFrenchBJP State Coordinating Committee PresidentChennai MRC Nagar
ShareTweetSendShare
Previous Post

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

Next Post

ஆசிரியர் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies