சென்னை உள்ளிட்ட தமிழக்த்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். வடதமிழகம் தலைவர் குமாரசாமி தலைமையில், எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகில் இருந்து பேரணி துவங்கி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் அரங்கில் முடிவடைந்தது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். காவல்துறை பாதுகாப்போடு நடைபெற்ற அணிவகுப்பில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் 99ம் ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹொல்கர் 300வது ஜெய்ந்தி விழா, சுப்பிரமணிய சிவா 140 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி காய்கனி மார்க்கெட், பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, மின்வாரிய அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. . இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 450க்கும் மேற்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை பனங்காலை பகுதியில் இருந்து படந்தாலுமூடு வரை ஆர்எஸ்எஸ் பதசஞ்சலன் அணிவகுப்பு நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டு வீதி வீதியாக ஊர்வலம் சென்றனர். ஸ்வயம் சேவகர்கள், சீருடையுடன் கம்பீரமாக நடந்து வந்ததை ஏராளமான பொதுமக்கள் சாலையில் நின்றபடி கண்டு ரசித்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் 16 வீதிகள் வழியாக பதசஞ்சல் பேரணி நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்திலும் இசை வாத்தியங்கள் முழங்க ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி கோலாகலமாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் அன்னூரிலும் ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவகர்களின் பதசஞ்சல் பேரணி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட சுவயம் சேவகர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு பேரணியாக சென்றதை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.