ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தை ஏலம் விடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அரசு அலுவலகம் போர்க்களமாக காட்சியளித்தது.
முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் 35க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்ட நிலையில், ஏலம் தொடங்கியபோது இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து நாற்காலிகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில், அங்கிருந்த காவலர்கள் செய்வதறியாத திகைத்து நின்றனர். இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில், பத்திரிகையாளர் ஒருவரும் காயமடைந்தார்.