தடைபட்ட சிகிச்சை : பறிபோன 3 உயிர்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 9, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடைபட்ட சிகிச்சை : பறிபோன 3 உயிர்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 2, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், விபத்தில் சிக்கிய 3 பேர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

சாலை விபத்தில் சிக்கிய 3 பேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றான ராமநாதபுரத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-ம் தளத்தில், மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி புகையால் சூழப்பட்டு நோயாளிகளை கடும் சிரமத்திற்குள்ளாக்க, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியது.

நோயாளிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாவதை தடுக்க மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, உடனடியாக அவர்களை முதல் தளத்திற்கு மாற்றும் வேலையில் இறங்கினர். இருண்ட கட்டடத்தினுள் டார்ச் வெளிச்சத்திற்கு இடையே ஒன்றன்பின் ஒருவராக அனைத்து நோயாளிகளும் முதல் தளத்திற்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். இடப்பற்றாக்குறையால் சிலர் அருகில் உள்ள பழைய மருத்துவமனை கட்டடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழப்புகளை தவிர்த்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முன், அன்றிரவு வழுதூர் அருகே அவசர சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனமும், அங்குள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு வெளியே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடம் வந்த போலீசார் ஆம்புலன்ஸினுள் சிக்கிய மூவரையும் போராடி மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையை அடைந்தபோது, அங்கு தீவிபத்து காரணமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அம்மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 150 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் சர்வதேச தரத்தில் மருத்துவ உபகரணங்களும், முதலுதவி மையங்களும் உள்ளதாக சொல்லப்பட்டது.

இருப்பினும் அந்த கட்டடத்தில் ஏற்பட்ட சிறிய மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதும், அந்த சலசலப்பிற்கு இடையே விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூவர், உடனடி சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்திருப்பதும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: hospital staffVazhudurambulance accidentelectrical leakage108 ambulanceRamanathapuram Government Medical College Hospital
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை மருத்துவக்கழிவு விவகாரம் – கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சேலத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies