தடைபட்ட சிகிச்சை : பறிபோன 3 உயிர்கள் - சிறப்பு தொகுப்பு!
Jun 11, 2026, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடைபட்ட சிகிச்சை : பறிபோன 3 உயிர்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 2, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், விபத்தில் சிக்கிய 3 பேர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

சாலை விபத்தில் சிக்கிய 3 பேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றான ராமநாதபுரத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-ம் தளத்தில், மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி புகையால் சூழப்பட்டு நோயாளிகளை கடும் சிரமத்திற்குள்ளாக்க, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியது.

நோயாளிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாவதை தடுக்க மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, உடனடியாக அவர்களை முதல் தளத்திற்கு மாற்றும் வேலையில் இறங்கினர். இருண்ட கட்டடத்தினுள் டார்ச் வெளிச்சத்திற்கு இடையே ஒன்றன்பின் ஒருவராக அனைத்து நோயாளிகளும் முதல் தளத்திற்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். இடப்பற்றாக்குறையால் சிலர் அருகில் உள்ள பழைய மருத்துவமனை கட்டடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழப்புகளை தவிர்த்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முன், அன்றிரவு வழுதூர் அருகே அவசர சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனமும், அங்குள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு வெளியே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடம் வந்த போலீசார் ஆம்புலன்ஸினுள் சிக்கிய மூவரையும் போராடி மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவமனையை அடைந்தபோது, அங்கு தீவிபத்து காரணமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அம்மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 150 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் சர்வதேச தரத்தில் மருத்துவ உபகரணங்களும், முதலுதவி மையங்களும் உள்ளதாக சொல்லப்பட்டது.

இருப்பினும் அந்த கட்டடத்தில் ஏற்பட்ட சிறிய மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதும், அந்த சலசலப்பிற்கு இடையே விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூவர், உடனடி சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்திருப்பதும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: hospital staffVazhudurambulance accidentelectrical leakage108 ambulanceRamanathapuram Government Medical College Hospital
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மருத்துவக்கழிவு விவகாரம் – கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Next Post

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சேலத்தில் ஏபிவிபி மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்!

Related News

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.பி ராஜினாமா!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies