நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது - சிறப்பு தொகுப்பு!
Apr 21, 2026, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகை பாலியல் புகார் : நகைக்கடை அதிபர் கைது – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில், வயநாட்டில் தனக்குச் சொந்தமான ரிசார்ட்டில் இருந்த தொழிலதிபர் பாபி செம்மனூரை சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அது பற்றிய செய்தி தொகுப்பு.

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். கடந்த 2005ஆம் ஆண்டில் வெளியான ‘பாய் பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹனி ரோஸ் முன்னணி நடிகையானார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் நடிகை ஹனி ரோஸ், முதல் கனவே, காந்தர்வன், ஜீவாவின் ‘சிங்கம் புலி’, மல்லுக்கட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இயக்குனர் சுந்தர் C க்கு ஜோடியாக ‘பட்டாம்பூச்சி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பாலகிருஷ்ணாவின் ‘வீரசிம்மா ரெட்டி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றுக்குச் சிறப்பு விருந்தினராக தன்னை பிரபல தொழிலதிபர் ஒருவர் அழைத்ததாக கூறிய ஹனி ரோஸ், தான் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதனால்,அந்த தொழிலதிபர் தொடர்ந்து தம் மீது இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளால் சமூக வலைத் தளங்களில் எழுதி வருவதாகவும், இது குறித்து யாரும் அந்த தொழில் அதிபரிடம் கேட்கவில்லை என்றும் தனது முகநூல் பக்கத்தில் நடிகை ஹனி ரோஸ் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, தமது பதிவுக்குப் பதிலாக, முகநூலில் பலர் ஆபாசமாக கருத்துகளைத் தெரிவித்ததாக கூறி, தெரிவித்திருந்தார்.

மேலும், கேரளத் தொழிலதிபர் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை தொடுப்பதாகவும், தனது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு ஆபாசமாக பதிவிட்டதாகவும் ஹனி ரோஸ் கூறியிருந்தார்.

பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் பாலியல் தொல்லை கொடுப்பதாக, கொச்சி நடிகர்கள் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திலும் நடிகை ஹனி ரோஸ் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பாபி செம்மனூர் உட்பட 27 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரை விசாரிக்க, கொச்சி சென்ட்ரல் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தப் புகாரில், முதலாவதாக கும்மளம் பகுதியை சேர்ந்த ஷாஜி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, நடிகை ஹன்சிகாவுடன் தனது புதிய நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வற்காக கோயம்புத்தூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ‘போச்சே’ என்று அழைக்கப்படும் பாபி செம்மனூர், வயநாட்டில் அவரது சொந்த ரிசார்ட்டில் வைத்து கைது செய்யப் பட்டார்.

ஏற்கெனவே, கடந்த புதன்கிழமை, நடிகையைப் பற்றிய தனது முந்தைய கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் பாபி செம்மனூர் வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள டிஜிபியிடமும் நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். இதன் பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபல தொழில் அதிபரும், முன்னணி தங்க நகை வியாபாரியுமான பாபி செம்மனூர், செம்மனூர் குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பாபி செம்மனூரின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Wayanad resordBobby Chemmanur arrestThiruvananthapuram Lodge.Madhu KanawayGandharvanspecial investigation teamMalayalam film industryMalayalam actress Honey Rose
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ண ஜென்ம பூமி – ஈத்கா மசூதி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!

Next Post

நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்த திமுக பிரமுகர் கைது!

Related News

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies