பெரம்பலூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை - காவல் நிலையத்தின் மீது தாக்குதல்!
Apr 29, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரம்பலூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை – காவல் நிலையத்தின் மீது தாக்குதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 18, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் திருச்சி டிஐஜி வருண்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கலந்து கொண்ட நிலையில், தேவேந்திரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், மணிகண்டனை, தேவேந்திரன் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கை.களத்தூர் போலீசார், தேவேந்திரனை கைது செய்தனர். இந்நிலையில் கை.களத்தூர் காவல் நிலையத்தை உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட தேவேந்திரனை வெளியே விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மணிகண்டனின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

இதனை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில் தாக்குதல் குறித்து தகவலறிந்த திருச்சி டிஐஜி வருண்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக வந்த விசிக நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உயிரிழந்த மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்வதுடன், மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு  போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Tags: Manikandan deathPerambalurtrichy dig varunkumaryouth hacked to deathKai.Kalathurpolice station attacked
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகன விபத்து – இன்ஸ்டா பிரபலம் ராகுல் பலி!

Next Post

ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies