அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் - நீதிமன்றம் கேள்வி!
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் – நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2025, 07:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தேனியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தான் மின் உற்பத்தி கழக அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காததாலும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாததால் தன்னை பணியில் இருந்து நிறுத்தி வைத்ததாக தெரிவித்திருந்தார்.

தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் எனவே மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுதாரரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தரப்பில், மனுதாரரின் தந்தை கப்பலில் வேலை பார்த்த நிலையில் அவர் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை எனவும் தற்போது மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றதால் பணி வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில் பொது பணிக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Tags: Tamil language test.tamil languagetnpscMadurai bench of the High CourtTamil Nadu government service
Share
Tweet
SendShare
Previous Post

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று வழி – நீதிமன்றத்தில் ஆவின் பதில்!

Next Post

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies