மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயில் - இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயில் – இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது!

Murugesan M by Murugesan M
Mar 13, 2025, 12:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பசுமை எரிசக்தி துறையில் இந்திய ரயில்வே துறையின் முக்கிய மைல்கல்லாகும். இந்தியாவின் மிகவும் அதிநவீன ரயில்களில் ஒன்றான ஹைட்ரஜன் ரயில் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு,பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில், இந்திய இரயில்வே துறையிலும் , பாதுகாப்பான மற்றும் அமைதியான நவீன பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்கும் முயற்சிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.

2030ம் ஆண்டுக்குள் நிகர Zero கார்பன் வெளியீடு (Net Zero Carbon Emission) என்ற நோக்கத்துடன் இந்திய ரயில்வே துறை செயல்படுகிறது. உலகின் முதல் 100% பசுமை ரயில்வே ஆக மாறுவதே இந்திய ரயில்வே துறையின் இலக்காக உள்ளது.

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் முக்கிய அங்கமாக பார்க்கப் படுகிறது.

இந்த ஹைட்ரஜன் ரயிலில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கக் கூடிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை (Fuel Cells) பயன்படுத்தி இந்த ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் 1,200 குதிரைத்திறன் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலே, உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயிலாகும். இந்த ஹைட்ரஜன் ரயில் கார்பனை வெளியேற்றாமல், வெறும் நீரையும் வெப்பத்தையும் மட்டுமே வெளியிடுகிறது.

ஹைட்ரஜன் ரயில், கார்பன் வெளியேற்றமில்லாத தூய்மையான எரிசக்தியை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைகிறது. மேலும், எரிசக்தி திறன் அதிகம் என்பதால், வழக்கமான எரிபொருட்களை விட சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது. சத்தம் குறைவாக இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் ரயில், பயணிகளுக்கு அமைதியான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது.

ஹைட்ரஜன் ரயில், மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரஜன் ரயில், ஒரே நேரத்தில், 2,638 பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹைட்ரஜன் ரயிலில், பாதுகாப்பு மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு, மேம்பட்ட தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகி வரும் இந்திய ரயில்வே துறை, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபத் இடையே ஹைட்ரஜன் ரயிலின் இயக்கத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு மற்ற மாநிலங்களிலும் ஹைட்ரஜன் ரயில்கள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலி மாசுபாட்டையும் இயக்க செலவுகளையும் குறைப்பதன் மூலம், ஹைட்ரஜன் ரயில்கள் பாரம்பரிய ரயில் சேவைகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக அமைகிறது.

சீனா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. ஜெர்மனியில் ஹைட்ரஜன் ரயில் 2018ம் ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வந்தது. முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளதால், உலக அளவில் பசுமை எரிசக்தியில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது.

Tags: இந்தியாThe largest hydrogen train - to be put into service in India by March 31st!ஹைட்ரஜன் ரயில்
Share
Tweet
SendShare
Previous Post

சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

Next Post

கொடைக்கானல் அருகே தொட்டில் கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies