தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!
Jul 28, 2026, 09:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனித்துவமான அறிவாற்றல் : 2 வயதிற்குள் அபார சாதனை சென்னையின் சூப்பர் KID!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஆருஷ் பிறந்த 23 மாதங்களிலேயே பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். ஆருஷுக்கு இருக்கும் தனித்துவமிக்க அறிவாற்றல் குறித்தும் அவர் படைத்த சாதனைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

குழந்தைகள் வளர்ச்சியடையும் போது சித்திரங்களை அடையாளம் காணத் தொடங்கியதும், அதில் வரும் கார்டூன்களை தங்களாகவே நினைத்துக் கொண்டு சுட்டித் தனங்கள் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த தீபக் – அக்‌ஷயா தம்பதியினரின் குழந்தை ஆரூஷ் சற்று வித்தியாசமானதாக இருக்கிறார்.

பிறந்து பதினெட்டு மாதங்களே ஆன ஆருஷ் பொருட்கள், விலங்குகள் என அனைத்து விதமான அடையாளங்களை அவற்றின் பெயர்களோடு சுட்டிக்காட்டி National Book Of Records-ல் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

ஆரூஷ் பிறந்த சில மாதங்களிலிருந்தே தீபக் – அக்சயா தம்பதியினர் அவரை உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். செல்லும் இடங்களில் தோன்றும் படங்கள், கண்களுக்குத் தென்படும் அடையாளங்கள் என அனைத்தையும் தங்களின் குழந்தைக்கு ஆருஷுக்கு சொல்லித்தர அது அந்த குழந்தையின் மனதில் அச்சாணி போலப் பதியத் தொடங்கியுள்ளது. அதுவே பின்னாளில் அவரை சூப்பர் குழந்தையாகவும் மாற்றியுள்ளது.

250க்கும் அதிகமான பொருட்களைப் பெயருடன் சுட்டிக்காட்டும் ஆருஷின் திறமையை உணர்ந்த அவரது  பெற்றோர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இண்டர்நேசனல் புக் ஆப் ரெக்காட்ஸ் ஆகிய சாதனை விருதுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆருஷின் தனித்துவமிக்க சிந்தனை திறன் மற்றும் நியாபக சக்தி அவருக்கு விண்ணப்பித்த அனைத்து விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.

அனைவருமே வியக்கக் கூடிய அளவிற்கான  சாதனைகளைப் படைக்க ஆருஷுக்கு தனிப்பட்ட பயிற்சி, வற்புறுத்தலோ வழங்கவில்லை எனவும் அவரின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே இத்தகைய சாதனைகளைப் படைத்து வருவதாகக் கூறும் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்தும் விளக்குகின்றனர்.

23 மாதங்களில் அனைவரும் வியக்கும் சூப்பர் கிட்டாக வலம் வரும் ஆருஷ், அடுத்தடுத்த வயதை எட்டும் போது சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags: CHENNAI NEWSchennai news todayUnique intelligence: Chennai's super kid achieves incredible feat at the age of 22 வயதிற்குள் அபார சாதனை
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

சூரத்தில் சோதனை : 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies