பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயார் - வியோமிகா சிங்
Jun 21, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயார் – வியோமிகா சிங்

Murugesan M by Murugesan M
May 11, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளதாக, விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்துக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் சார்பில், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், பதான்கோட், ஸ்ரீநகர் விமான தளங்கள் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் தெரிவித்தது பொய்யான தகவல் என்றும் தெரிவித்தார்.

மசூதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் பொய்யான பரப்புரை செய்ததாக கூறிய அவர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தாக்கியதாகவும், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் விளக்கமளித்தார்.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முப்படைகளும் எந்த எல்லைக்கும் செல்லும் எனக்கூறிய வியோமிகா சிங், இந்தியாவின் எஸ்-400 உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் பொய் பரப்புரை செய்ததாகவும் கூறினார். மேலும், இந்தியாவின் அதிரடி ராணுவ தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒருங்கிணைப்பு, மன உறுதி சீர்குலைந்ததாகவும் வியோமிகா சிங் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரேஷி, பிரம்மோஸ் ஏவுகணையைத் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் பொய்ப் பரப்புரை செய்ததாகவும், இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவம் இப்போதும் தயாராகவே உள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராகவும், விழிப்புடனும், உறுதியுடனும் இருப்பதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான சாகசமும், பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டதாகவும் கமாண்டர் ரகு ஆர் நாயர் தெரிவித்தார்.

Tags: India is always ready to retaliate - Vyomika Singhவியோமிகா சிங்
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் அதிக வசூல் செய்த படம் ‘தொடரும்’!

Next Post

பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies