இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
May 7, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாகப் பயன்படுத்தப் பரிசீலிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தன்னிச்சையான முடிவு எனவும், இதனால் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடைசியாக 2003-ஆம் ஆண்டிலேயே வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் நடைபெற்றது எனவும், தற்போது பிரிவு 326-ன் கீழ் தீவிர திருத்தம் கட்டாயம் தேவை என்றும்  தேர்தல் ஆணையம் வாதிட்டதைச் சுட்டிக்காட்டியது.

விரிவான விசாரணைக்காக வழக்கை வரும் 28ஆம் தேதி உரிய அமர்வு முன்பு பட்டியலிடுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வரும் 21-ஆம் தேதிக்கு முன்னதாக வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அதற்கு, வரும் 28ஆம் தேதிக்கு முன்பு மனுதாரர்கள் எதிர்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்காக ஏற்கனவே பயன்படுத்தப்படும் 11 ஆவணங்களுடன் சேர்த்து, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தப் பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

Tags: Supreme Court issues instructions to the Election Commission of Indiaஉச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புஆதார்ரேஷன் கார்டு
ShareTweetSendShare
Previous Post

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

Next Post

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு : பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies