ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது - இன்று பலித்தது!
Jun 22, 2026, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும் என புதிய பாபா வாங்கா தனது புத்தகத்தில் கூறியிருந்தது அப்படியே பலித்திருப்பது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தீர்க்கதரிசிகளான பாபா வாங்கா மற்றும் நாஸ்ட்ராடமஸின் கணிப்புகள் உண்மையிலேயே பலித்து வரும் நிலையில், இதுதொடர்பான தேடல்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன..

இயற்கைப் பேரழிவுகள் கணிக்க முடியாதது… ஆனால், 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸின் நாஸ்ட்ராடமஸ் மற்றும் பல்கோரியாவின் பாபா வாங்கா போன்ற தீர்க்கதரிசிகளின் சில கணிப்புகள் ஒரே மாதிரி இருப்பதும், அவை நடப்பதும் வியப்பிலும் வியப்புதான். குறிப்பாக 2025ம் ஆண்டு உலகின் ஆதிக்க சக்தியாக இருக்கும் நாடு மாறும் என்றும், ஐரோப்பாவில் பெரும் போர் வெடிக்கும் என்றும், இருவரும் கணித்திருந்ததும், அவை நடப்பதும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக ஜூலையில், ஜப்பானைச் சுற்றி கடல் கொந்தளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தது அப்படியே நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று பலரும் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா எழுதி 1999ம் ஆண்டு வெளியான ‘The Future I Saw” புத்தகத்தில் ஜூலை 5ம் தேதி ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் கொந்தளிக்கும், நிலநடுக்கம் ஏற்படும் என்ற கணிப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவங்கள், குறிப்பிட்ட தேதியில் நடைபெறாவிட்டாலும், ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதன் தாக்கத்தால் ரஷ்யா, ஜப்பானைச் சுற்றி ஏற்பட்ட சுனாமியும் அவரது கணிப்பையே பிரதிபலிப்பதாகப் பலரும் நம்புகின்றனர். இதேபோன்று, ஆசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிப்பு ஏற்படக் கூடும் என நாஸ்ட்ராடமஸூம் கணித்திருந்த நிலையில், இது சர்வதேச  அளவில் கவனம் பெற்றுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் டிசாஸ்டர் போன்ற சம்பவங்களைப் பாபா வாங்கா முன்னரே கணித்தவர். 2025-ம் ஆண்டு  ஐரோப்பாவில் மக்கள் தொகையைப் பாதிக்கும் அளவு மிகப் பெரிய போர் நடக்கும் என்றும், பெரிய சக்தியாக ரஷ்யா எழுச்சி பெறும் என்பதும், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில்  இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்பதும் பாபா வாங்காவின் கணிப்பு.

2026ம் ஆண்டில் அறிவியல் சமூகம் செயற்கை முறையில் உடல் உறுப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று அவர் கூறியது உண்மையாக இல்லாவிட்டாலும், ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளில் சிறுநீரகம், கல்லீரல் திசுக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பாபா வாங்காவின் கணிப்புக்கு வலுசேர்த்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

Tags: russiaரஷ்யாTsunami to hit Russia and Japan: Baba Vanga predicted it then - it came true todayபாபா வாங்காஜப்பானை சுனாமி தாக்கும்
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

Next Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Related News

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies