காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கைதான 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை!

Murugesan M by Murugesan M
Aug 6, 2025, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ஜூன் 28-ம் தேதி நகை காணாமல் போன வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிபிஐ மனுவை ஏற்றுக் கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரையும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் நேற்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் வைத்து காவலர்கள் 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தனிப்படை காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாகச் சம்பவம் நடந்த ஜூன் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், அவர்களின் செல்போன் அழைப்புகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மற்றொருபுறம் இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடமும், காவலர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: சிவகங்கை மாவட்டம்சிபிஐ விசாரணைகாவலாளி அஜித்குமார் கொலைமடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்Guard Ajith Kumar murder case: CBI interrogates 5 arrested guards.
Share
Tweet
SendShare
Previous Post

மகனுடன் ஏழுமலையானை வழிபட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்!

Next Post

எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது – நகை பறிமுதல்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies