பூமியை அதி வேகமாக நெருங்கும் 'சிறுகோள்' : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!
Aug 24, 2025, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

990 அடி உயரம்கொண்ட ஒரு ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

நமது சூரியக் குடும்பம், பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விண்வெளிப் பொருட்களால் நிரம்பியுள்ளது. இவற்றுள் குறிப்பிடத்தக்கதான சிறுகோள்கள் என்பவை சூரியனைச் சுற்றி வரும் பாறைத் துண்டுகளாகும்.

இவை நமது சூரியக் குடும்பத்தின் ஆரம்பக் காலம் பற்றிய விலைமதிப்பற்ற தகவல்களை தருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், 1997 QK1 எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.

990 அடி உயரம் உள்ள இந்த சிறுகோள் ஒரு பெரிய ஸ்டேடியம் அளவில் இருப்பதாகவும், அது பூமியை நோக்கி மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி பூமியிலிருந்து சுமார் 1.87 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தரநிலைகளின்படி இது ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருந்தாலும், பூமிக்கு இந்த சிறுகோளால் எந்த வகையிலும் பாதிப்பில்லை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பூமிக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த சிறுகோள் பயணிக்கும் பாதையானது விஞ்ஞானிகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய சுற்றுப்பாதை மாற்றங்கள் கூட சிறுகோளின் பாதையை மாற்றக்கூடும் என்பதால், சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே நாசா, ESA, JAXA ஆகிய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, 2029-ம் ஆண்டு அப்போபிஸ் உள்ளிட்ட சிறுகோள்களை ஆராயும் திட்டங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்வெளி ஒருகணம் அமைதியாகவும், மறுகணம் கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்பதால், விஞ்ஞானிகள் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதில் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Tags: நாசா'Asteroid' approaching Earth at high speed: NASA confirms no dangerபூமியை அதி வேகமாக நெருங்கும் 'சிறுகோள்'NASA'One Earth
ShareTweetSendShare
Previous Post

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Next Post

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies