கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 9, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பை திமுக அரசு! காவு வாங்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மேல்சாணங்குப்பம் அரசுத் தொடக்கப்பள்ளியில் மதுபோதையில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் திரு. பாரத் அம்பேத்கர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும் அந்தத் தலைமையாசிரியர் தொடர்ந்து 4 பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது, திராவிட மாடல் ஆட்சியில் அரசுப்பள்ளிகள் சீரழிந்துள்ளதைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

பணிநேரத்தில் மது அருந்தியது தொடங்கி, தொடர்ந்து மாணவர்களிடம் அத்துமீறுவது வரையிலான கொடூரச் செயல்களில் ஈடுபடும் அளவிற்கு அந்தத் தலைமையாசிரியருக்கு துணிச்சல் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைத் தூக்கியெறிந்து, விளம்பரத்தை மட்டும் தூக்கிப்பிடிக்கும் திமுக ஆட்சியில் எப்படியானாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான் குற்றம் புரியத் தூண்டியதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம், கண்துடைப்புக்காக கைது செய்துவிட்டு, “பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்” என முழங்குவதும், பின் செய்தியடங்கியதும், குற்றம்புரிந்த ஆசிரியரை வேறு கல்விநிலையத்துக்கு இடமாற்றம் செய்து, மாணவர்களின் பாதுகாப்பைப் பலியிடுவதும் தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? என வினவியுள்ளார்.

தேர்தல் விளம்பரங்களில் ‘அப்பா’ எனும் வேடம் தரிக்கும் கடனுக்காகவாவது, அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை முதல்வர் ஸ்டாலின்  கண்டுகொள்வாரா? கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களையே மாணவர்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கூடாரங்களாய் மாற்றிய அறிவாலய அரசின் மெத்தனமே அதன் பகல் கனவுகளுக்கு சமாதி கட்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: Bharat AmbedkarDMK governmentsexual harassment.Tamil Nadu BJP state president Nainar NagendranTirupattur Melchananguppam Government Primary School
ShareTweetSendShare
Previous Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Next Post

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies