நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!
Aug 7, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2025, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை  காரணமாக அந்நாட்டின் பிரதமர்  சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நேபாள நாட்டில் உள்ள அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றாத 26 சமூக ஊடகங்களை நேபாள அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை  கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது.

இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நேபாள நாடாளுமன்றத்தை  போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையை நேபாள அரசு திரும்பப்பெற்றது. இருப்பினும் நீடித்த வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு படையினரும் காயமடைந்தனர்.

கட்டுக்கடங்காத இந்த வன்முறையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேபாள நாட்டின் நிதித்துறை அமைச்சரை  போராட்டக்காரர்கள் தாக்கினர். மேலும் நேபாள பிரதமர்  சர்மா ஒலியின் இல்லம் சூறையாடப்பட்டுத் தீ வைத்து எரிக்கப்பட்டது.

ஏற்கெனவே நேபாள உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பதவி விலகிய நிலையில் நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகப் பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ராணுவ கட்டுப்பாடு வர உள்ளதாகக் கூறப்படும் நிலையில் சர்மா ஒலி நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நேபாளத்தில் நிலைமை மோசமாக உள்ளதால் இந்தியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Tags: nepalProtesters ransacked and burned down Sharma Oli's house
Share
Tweet
SendShare
Previous Post

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

Next Post

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies