இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!
Apr 29, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட இந்தியாவில் இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் நச்சுத் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோல்ட்ரிப் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மருந்துத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அமலாத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Tags: Incident where 21 children died after consuming medicine: Enforcement Department raids the company owner's house and officesவட இந்தியா
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

Next Post

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies