உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!
Sep 11, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Oct 22, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைனில் நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் புதிய திட்டத்தை மேற்கொள்ளப் பரிசீலித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரஷ்யாவை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், நிலத்தைத் தியாகம் செய்யும் எந்த முடிவையும் ஏற்க முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியது முதல் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. முன்னதாகக் கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அப்போதிருந்தே உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் ஆயுதம் எடுக்கத் தொடங்கியிருந்தனர்.

உக்ரைன் – ரஷ்யா போரால் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வரும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான தடைகளை விதித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்தப் போர் உலக பொருளாதாரம், ஆற்றல் விலை மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், உக்ரைன் தனது நிலப்பகுதியைத் தியாகம் செய்யும் வகையில் ஓர் அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், ரஷ்ய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் எந்த நிலப்பகுதியையும் தியாகம் செய்யவேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள அவர்கள், ரஷ்ய அதிபர் புதின் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தையும் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளை உக்ரைனுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்டு வரும் தூதரக முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போலந்து, இங்கிலாந்து, பின்லாந்து, டென்மார்க், நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரதிகாரிகள் மற்றும் தலைவர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்த உடனடி போர்நிறுத்த அழைப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், சர்வதேச எல்லைகள் வலுக்கட்டாயமாக மாற்றப்படக் கூடாது என்ற கோட்பாட்டில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர்கள், உக்ரைன் மக்கள் ஒரு நிலையான அமைதியான வாழ்க்கையை பெற தகுதியானவர்கள் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் உக்ரைனின் முழுமையான சுயாட்சியை மதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். முன்னதாகப் போரை நிறுத்த உக்ரைன் சில நிலங்களைக் கைவிட நேரிடும் எனத் தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மை பேச்சுவார்த்தைகளுக்குப் பின், தன் நிலைப்பாட்டை மாற்றி இரு தரப்பும் அவரவர் வரம்புகளில் நின்று உடனடியாகப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

தற்போது உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியைக் ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதே வேளையில் அமைதிக்கு பதிலாக நிலம் என்ற எந்த உடன்பாட்டையும் ஏற்க இயலாது என உக்ரைன் உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல, தற்போதைய வரம்புகளில் போரை நிறுத்துவது ரஷ்யாவுக்கு மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பளிக்கலாம் என்றும் உக்ரைன் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், வரும் 23-ம் தேதி பிரசெல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில், ரஷ்யாவுக்கு எதிரான கூடுதல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தடைகள்குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மற்றொருபுறம் உக்ரைனுக்கு ஆதரவாகவுள்ள 35 நாடுகள் இணைந்த கூட்டணியின் கூட்டம், வரும் 24-ம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த நடவடிக்கை ஐரோப்பா மற்றும் உக்ரைனின் ஒருமித்த குரலில், அமைதிக்கான புதிய முயற்சியின் தொடக்கத்தை குறிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Tags: UkraineDonald TrumpNew attempt to stop the war in Ukraine: Possibility of imposing additional economic sanctions on Russia
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் சத்தமே இல்லாமல் சாராய விற்பனையில் கல்லா கட்டுக்கிறார் – நயினார் நாகேந்திரன்

Next Post

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Related News

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies