நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!
Jul 23, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 30, 2025, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனப் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு மாறாக 3 புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், மூன்று சட்டங்களை நிறைவேற்றும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் அவசர கதியில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை என்ற காரணங்களைக் கூறி சட்டங்களை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

சட்டம் இயற்றும் தகுதியை எதிர்க்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், இது சம்பந்தமான தீர்ப்புகள் ஏதும் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

அப்போது திமுக தரப்பில், சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் இடையீட்டு மனுவை ஏற்க முடியாது என்றும், வேண்டுமென்றால் தனி மனுவாகத் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை நவம்பர் மூன்றாம் வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்The court cannot be allowed to be used as a political platform - Madras High Court categorically
ShareTweetSendShare
Previous Post

செல்ஃபி எடுத்து செல்போனை ரசிகரை நோக்கி வீசிய என்ரிக்கே இக்லேசியஸ்!

Next Post

உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் : சென்னை மாநகராட்சி தீர்மானம்!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies