காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட தங்கத்தேர் - காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!
Jul 28, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட தங்கத்தேர் – காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 09:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிமடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செய்யப்பட்ட காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேரை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒப்படைத்தார்.

உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தேர் செய்யும் பணியானது 12 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சங்கர மடம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யப்பட்டது.

இந்நிலையில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் தங்கத்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கத் தேரினை அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒப்படைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரசித்தி பெற்றது என தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள 3 முக்கிய கோயில்களான காமாட்சியம்மன் கோயிலுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளின் சங்கல்பத்துடன் தங்கத்தேரும், வரதராஜ பெருமாளுக்கு மரத்தேரும் செய்யப்பட்டு வழங்கப்பட்டதாக கூறினார்.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சங்கல்பம் செய்யப்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மக்களின் பங்களிப்புடன் தங்கத்தேர் செய்யப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

Tags: minister saker babuVijayendra Saraswathi SwamigalKanchi Ekambaranathar Temple Golden ChariotKanchi MathKanchipuram Ekambaranathar Temple
ShareTweetSendShare
Previous Post

தஞ்சையில் ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கொள்ளை போன நகைகள் மீட்பு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது!

Next Post

தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies