கூட்டணி குறித்து முடிவெடுக்கப் பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில்,
கூட்டணி குறித்து முடிவெடுக்கப் பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது என்றும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றன என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
சட்டமன்ற தேர்தலில் அமமுக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறிய டிடிவி தினகரன் அமமுகவை தவிர்த்து விட்டு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
அமமுக ஆட்சியைத் தீர்மானிக்கும் என்றும் டிச.31-க்குள் கூட்டணி முடிவாகி விடும் என எதிர்பார்த்தோம், ஆனால் அது தள்ளிப் போகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
















