சீனா மற்றும் அமெரிக்காவுக்கு சவால் விடும் இந்தியாவின் 5-ம் தலைமுறை ஹெலிகாப்டர்கள்!
Jun 19, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு சவால் விடும் இந்தியாவின் 5-ம் தலைமுறை ஹெலிகாப்டர்கள்!

Manikandan by Manikandan
Jan 31, 2026, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா 5-ம் தலைமுறை தாக்குதல் திறன்கொண்ட LCH PRACHAND ஹெலிகாப்டர்களை உருவாக்கி, ஹிமாலய பருவ நிலைகளுக்கான செயல்திறனில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவிற்கு வல்லமை பெற்றுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 5‑ம் தலைமுறை தாக்குதல் திறன்கொண்ட LCH PRACHAND ஹெலிகாப்டர்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அவை 2027 – 2028ம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Hindustan Aeronautics Limited உள்நாட்டில் வடிவமைத்து உற்பத்தி செய்யும் இந்த ஹெலிகாப்டர்கள், குறைந்த செலவில் மேம்பட்ட செயல்திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும் தன்மை கொண்ட இந்த வகை ஹெலிகாப்டர்கள், ஹிமாலயப் பருவ நிலைகள் மற்றும் கடுமையான சூழல்களில் திறமையாக செயலாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Air to Air மற்றும் Air to Ground மிசைல்கள், ராக்கெட்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள LCH PRACHAND ஹெலிகாப்டர்களில், கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள Electro Optical பாகுபாடு மற்றும் Helmet Mount System போன்ற மேம்பட்ட கருவிகள், இவற்றை அதிக செயல்திறன் வாய்ந்ததாக மாற்றுகின்றன.

 

62 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், மொத்தம் 156 LCH PRACHAND ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் சிறு – நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பு உருவாகி, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், PRACHAND ஹெலிகாப்டர்கள் மூலம் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்தும், சில முன்னணி ஹெலிகாப்டர்களுக்கு சமமான வல்லமை இந்திய ராணுவத்துக்கும் கிடைக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உயரமான எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதனால் மேலும் வலுப்பெறும் என அவர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே இந்த திட்டம் “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் முன்முயற்சிகளுள் ஒன்று எனவும், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பையும், உற்பத்தி துறையையும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த LCH PRACHAND ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்திற்கும், விமானப்படைக்கும் புதிய சக்தி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: LCH Prachand helicoptersLCH PrachandINDIAN ARMY NEWSPrachand helicoptersArmyindian armyMake in indiahelicoptersIndia's 5th generation
ShareTweetSendShare
Previous Post

சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக உறவு ஆபத்தானது – வயிற்றெரிச்சலை கொட்டியுள்ள டிரம்ப்!

Next Post

ட்ரம்ப்பின் துருப்புச் சீட்டா? மெலனியா ஆவணப் படம் – வரவேற்பளிக்காத மக்கள்!

Related News

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பொதுவேட்பாளர்?

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies