திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு பகுதியில் அரசு அனுமதி பெற்று பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி பனை வெல்லம் தயாரிக்கும் தொழிலில் குமரவேல் என்பவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பனை மரத்தில் இருந்து கள் இறக்கியதாக கூறி கைது செய்த போலீசார், அவரது பதநீர் பானைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனை அறிந்த, குமரவேல் குடும்பத்தினர், வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















