தமிழக கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு வருமானம் பார்த்துள்ளதாக இந்து பாதுகாப்பு படை தேசிய தலைவர் கண்ணன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் இந்து பாதுகாப்பு படையின் எழுச்சி மாநாடு நடைபெற்றது. தேசிய தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்காயிரம் கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகவும், அந்த துறையை சார்ந்த அமைச்சரும், அதிகாரிகளும் நல்ல வருமானத்தை பார்த்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், ஓட்டுக்காக திருமாவளவன் கோயிலுக்கு செல்வதாக கண்ணன் விமர்சித்தார்.
















