திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் தேவையில்லை என்ற மனநிலைக்கு திமுக வந்துள்ளது என நினைப்பதாக தெரிவித்தார்.
திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், 90% பேர் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இண்டி கூட்டணி, காங்கிரசை “திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது முன்னிலைப்படுத்தவில்லை என்றும், அமைச்சர்கள் வாயிலாக சாடும்போது காங்கிரஸ் தாமாக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என முதலமைச்சர் நினைப்பதாகவும் விஜயதரணி கூறினார்.
















