ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அவரது மனைவி, பிள்ளைகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குடும்பம் என்ற வரையறையை மத்திய அரசு விரிவாக்கியுள்ளது.
அதன்படி ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்படும் வீட்டில் இனி அவரது மனைவி, குழந்தைகளுடன், உடன் பிறந்தவர்கள், பெற்றோர், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
















