இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி சல்மா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாகிஸ்தானின் தலையீட்டால் ஈரான் போர் நின்றிருக்கிறது என்றும், விஸ்வக்குரு பாவம்.! சங்கிகள் எப்படி ஜீரணிக்கப்போகிறீர்கள்?என்று வெட்கமில்லாமல் நா கூசாமல் சல்மா தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்து தெரிவிப்பது தான் ஸ்டாலின் கற்றுக் கொடுத்த திராவிட மாடல் அரசியலா? என்றும், தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும், சல்மா தனது கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்திள்ளது.
















