சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற கபாலீஸ்வரர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி மனமுருகி வழிபட்டார்.
இதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டார்.
மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வளர்மதி, வேளச்சேரி தொகுதி வேட்பாளர் அசோக்கிற்கு ஆதரவு திரட்டினார். அமித்ஷாவுக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
















