சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், இழப்பை ஈடுகட்டும் விதமாக எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 46 பைசாவும், டீசல் 2 ரூபாய் 57 பைசாவும் உயர்ந்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4-வது முறையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















