உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உள்ளிட்ட 5 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 22ஆம் தேதி மற்றும் 27-ம் தேதி என இரு நாட்கள் நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டங்களில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக உயர்த்துவதற்காக ஐந்து முக்கிய நபர்களின் பெயர்கள் முறைப்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த அதிகாரப்பூர்வப் பட்டியலில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு , மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மற்றும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் இவர்களுடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோரது பெயர்களும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
















