ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் குவாலிபையர் 2 ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் குஜராத் களமிறங்கி விளையாடியது.தொடக்கம் முதல் கில், சாய் சுதர்சன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். இருவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்த குஜராத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் குஜராத், பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது.
















