மறைந்த நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி உடலுக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார் மோகினி, நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். கார் பந்தய பயிற்சிக்காக துபாய் சென்றிருந்த அஜித் குமாருக்கு, இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அஜித் குமாரின் தாயார் உடலுக்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரின் குடும்பத்தாருக்கும் முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்ப்டடது.
















