அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து மூன்று சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள் அவர், தொழில்நுட்ப பிரச்சனை காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் மூன்று சேனல்களை ஒளிபரப்பு செய்ய இயலவில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.
















