“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலியாக இணையதள முகவரி தொடங்கி பக்தர்களிடம் பணம் மோசடி செய்யும் நபர்களை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் வசதிக்காக 2014ம் ஆண்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் யாத்ரி நிவாஸ் திறக்கப்பட்டது. எனினும் இதற்கு தனியாக இணையதள முகவரி கிடையாது. இதனை பயன்படுத்தி சிலர், மோசடியாக யாத்ரி நிவாஸ் பெயரில் பல போலி இணையதளங்களைஉருவாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அறியாத பக்தர்கள், தங்கும் விடுதி உள்ளிட்டவைக்காக ஆயிர கணக்கில் பணம் அனுப்பி ஏமாறுகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்படி, மோசடியாளர்களை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
















