காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுவாமி தரிசனம் செய்தார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து, காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு காஞ்சி சங்கராச்சாரியார்களான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்த நிலையில், அவர்களுடன் இணைந்து காமாட்சி அம்மனை வழிபட்டார். பின்னர் ஆதிசங்கர பீடத்திற்கு சென்றபோது, கோயில் நிர்வாகம் சார்பில் மத்திய நிதி அமைச்சருக்கு பிரசாதங்கள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில் சங்கராச்சாரியார்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் நிற சால்வைகள் வழங்கப்பட்டன. பின்னர் தீப ஆராதனை காட்டப்பட்டது.
















