நகராட்சி நிர்வாகத் துறை ஊழல் குறித்து, சட்டப்பேரவையில் தவெக அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.என்.நேருவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத் துறையில் திட்டங்களை தீட்டிவிட்டதாக திமுகவினர் கூறுவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இப்போதும், பெண்கள் குடத்தை தூக்கிக்கொண்டு தண்ணீருக்காக தெருவில் காத்திருப்பதாக வேதனை தெரிவித்தார். உள்ளாட்சித் துறை தற்போதும் திமுகவிடம் உள்ளதாகவும், சென்னை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தவெக அரசுடன் இணைந்து செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க 100 சதவீத வெற்றி பெற்றதும், அனைத்து ஊழல் ஆதாரங்களும் வெளிவரும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்















