நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பி நாடு திரும்பிய 28 தமிழக பக்தர்களுக்கு கோவை விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பக்தர்கள், அங்கு பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து நாடு திரும்பினர். கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக பக்தர்களை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பக்தர்கள், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு வரை இருந்ததாகவும், பின்னர் கைலாய யாத்திரைக்காக அங்கிருந்து புறப்பட்டதால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாகவும் தெரிவித்தனர்.
வெள்ளம் குறித்த தகவல் அறிந்ததும், தங்களது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்ததாகவும், தங்களது பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலைப்பட்டதாகவும் கூறினர்.
தங்களை பாதுகாப்பாக வெளியேற்ற சீன அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டனர். மேலும், மத்திய மற்றும் தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
















