தனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் தமிழகத்தில் 24 மணி நேரமும் மதுபான கடையை திறந்து விடுவேன் என திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பம்மல் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் புகழேந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தால் தமிழகத்தில் 24 மணி நேரமும் மதுக்கடைகள் செயல்படும் எனவும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு சாகட்டும் எனவும் பேசினார். இவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.