ஆப்ரேஷன் சிந்தூரில் நூர்கான் விமானத்தளம் கடும் சேதம் - ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
Jul 28, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூரில் நூர்கான் விமானத்தளம் கடும் சேதம் – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி இந்து சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களை அழித்த இந்தியா சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது.

பதிலுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 800க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா நடுவானிலேயே இடைமறித்து அழித்தது. மேலும், பாகிஸ்தானின் நூர் கான் சர்கோதா, ரஃபிக்கி, ஜேக்கபாபத், முரிட்கே உள்ளிட்ட 11 முக்கிய விமானப்படைத் தளங்களை இந்தியாவின் ஏவுகணைகள் தாக்கி அழித்தன.

இந்தியாவின் அதிரடித் தாக்குதலைத் தாங்க முடியாத பாகிஸ்தான் இராணுவம் கெஞ்சியதால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியாவின் தாக்குதலையடுத்து கடந்த மே-13 ஆம் தேதி மேக்சர் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பாகிஸ்தானின் நூர் கான், சர்கோதா, ஜேக்கபாபத் ஆகிய விமானப்படை தளங்கள் சேதமடைந்திருப்பதைத் தெளிவாகக் காட்டி இருந்தன.

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு எந்தப் பாதிப்புகளும் இல்லை என்று தொடர்ந்து மறுத்துவந்த அந்நாட்டுத் தலைவர்கள், இப்போது உண்மையைப் பேசத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், நூர் கான் விமானப்படைத் தளத்தை இந்திய ட்ரோன்கள் தாக்கியதாகவும், முக்கிய ராணுவ நிலையத்தைச் சேதப்படுத்தியதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் படுகாயம் அடைந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

36 மணி நேரத்தில், குறைந்தது 80 ட்ரோன்கள் அனுப்பப்பட்டன என்று கூறியுள்ள இஷாக் தார், அதில் ஒரே ஒரு ட்ரோனின் தாக்குதலே இந்தக் கடுமையான பாதிப்புக்குக் காரணம் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆகியோர் இந்தியாவுடன் பேச விரும்புவதாகத் தெரிவித்ததாகவும், இந்தியாவுடன் பாகிஸ்தான் போருக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறியதாகவும் அதன்பிறகே போர் நிறுத்தத்துக்கு இந்தியாவிடம் வேண்டுகோள் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி பாகிஸ்தான் ராணுவம் அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஜர்தாரியின் மனைவியுமான பெனாசிர் பூட்டோவின் நினைவு நாளில் கலந்து கொண்டு பேசிய ஜர்தாரி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலை அசிம் முனீர் தடுத்ததால் தான் அவருக்குப் பீல்டு மார்ஷல் பதவி வழங்கப் பட்டது என்றும் தெரிவித்திருந்தார். நூர் கான் விமானத் தளத்தைத் தாக்கியதாக இந்தியா இதுவரை வெளிப்படையாகக் கூறாதநிலையில், பாகிஸ்தானே முன்வந்து இப்போது தங்களின் முக்கிய விமானத் தளங்கள் தாக்கப்பட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது.

Tags: In Operation Sindoorthe Nur Khan airbase suffered heavy damage - Pakistan admitted.pakistanindian armypmmodiஆப்ரேஷன் சிந்துார்
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது – நயினார் நாகேந்திரன்

Next Post

இனி ஒரு நாளைக்கு “25 மணிநேரம்” வெளியான புதிய ஆய்வு முடிவு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies