வெப்ப அலை காரணமாக, நாட்டில் மின்தேவை 265 புள்ளி 44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குளிா்சாதன கருவிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினம் நாட்டில் மின்தேவை 265 புள்ளி 44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், வரும் நாள்களில் மின்சாரப் பயன்பாடும் நுகா்வும் மேலும் அதிகரிக்கக்கூடும் என மின்துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
















