மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிப்பதாகத் தெரிவித்தார்.
கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்றும்,இம்முடிவில் தமிழக அரசு சட்டரீதியாக உறுதியான நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.
முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணையை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்த ஆளுநர் அர்லேகர், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீரின் மட்டத்தை உயர்த்தாமல் புதிய அணை கட்ட முயற்சிப்பது தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
















