78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை - சிறப்பு கட்டுரை!
Aug 3, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் அபாயகரமான தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் 78 ஆண்டுகால கனவு நிறைவேறும் நிலையில், இந்தத் திட்டம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் நான்கரை லட்சம் சாலை விபத்துகள் பதிவாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பதிவாவதாக புள்ளிவிவரம் கவலைக்குரிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் மலை பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், அதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத்தொடர்ந்து, தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க சிறப்பு வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செவ்வனே செய்து வருகிறது.

அதிலும், அபாயகரமான வளைவுகளுடன் அடர் வனப்பகுதியின் நடுவில் உள்ள மலைப்பாதையை சீரமைத்து 6.6 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் வகையில், இத்திட்டம் 905 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 83 இடங்களில் 8 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரத்தில் தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

வழக்கமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒரு கிலோமீட்டர் தூர சாலை 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்படும் நிலையில், தொப்பூர் மலைப்பாதையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோமீட்டர் தூர சாலை 137 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், மலைப்பாதையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், அபாயகரமான வளைவுகள் அனைத்தும் மேம்பாலங்கள் வாயிலாக நேராக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொப்பூர் மலைப்பாதை திட்டப் பணி 41 சதவீதம் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்கிறார் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசலு.

தற்போது தொப்பூர் மலைப்பாதை நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், பாதுகாப்பு வசதிகளுடன் 5 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதன் சிக்கல் மிகுந்த நில அமைப்பை கருத்தில் கொண்டு, நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பூர் மலைப்பாதை மேம்படுத்தப்படுவதன் மூலம் சேலம்- தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags: nhaiDharmapuri districtNational Highways AuthorityThoppur Ghat road
ShareTweetSendShare
Previous Post

மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை – ஆளுநர் உரை

Next Post

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies