78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை - சிறப்பு கட்டுரை!
Sep 17, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் அபாயகரமான தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் 78 ஆண்டுகால கனவு நிறைவேறும் நிலையில், இந்தத் திட்டம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் நான்கரை லட்சம் சாலை விபத்துகள் பதிவாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பதிவாவதாக புள்ளிவிவரம் கவலைக்குரிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் மலை பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், அதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத்தொடர்ந்து, தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க சிறப்பு வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செவ்வனே செய்து வருகிறது.

அதிலும், அபாயகரமான வளைவுகளுடன் அடர் வனப்பகுதியின் நடுவில் உள்ள மலைப்பாதையை சீரமைத்து 6.6 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் வகையில், இத்திட்டம் 905 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 83 இடங்களில் 8 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரத்தில் தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

வழக்கமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒரு கிலோமீட்டர் தூர சாலை 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்படும் நிலையில், தொப்பூர் மலைப்பாதையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோமீட்டர் தூர சாலை 137 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், மலைப்பாதையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், அபாயகரமான வளைவுகள் அனைத்தும் மேம்பாலங்கள் வாயிலாக நேராக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொப்பூர் மலைப்பாதை திட்டப் பணி 41 சதவீதம் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்கிறார் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசலு.

தற்போது தொப்பூர் மலைப்பாதை நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், பாதுகாப்பு வசதிகளுடன் 5 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதன் சிக்கல் மிகுந்த நில அமைப்பை கருத்தில் கொண்டு, நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பூர் மலைப்பாதை மேம்படுத்தப்படுவதன் மூலம் சேலம்- தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags: Thoppur Ghat roadnhaiDharmapuri districtNational Highways Authority
Share
Tweet
SendShare
Previous Post

மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை – ஆளுநர் உரை

Next Post

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies