குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்துப்பதிவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எனவும் நாட்டிற்காக குடியரசு தலைவரின் அர்ப்பணிப்பு சேவை மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவிப்பதகாவும் கூறியிருந்தார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து செய்தியில், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எனவும் அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டிற்கான குடியரசு தலைவரின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ள எல்.முருகன் நாட்டை வழிநடத்துவதில் குடியரசு தலைவருக்கு தொடர்ந்து வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன் எனவும் தனது பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
வீ த லீடர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், குடியரசு தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் எனவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். தேசத்தை வழிநடத்துவதில் குடிரசு தலைவர் திரவுபதி முர்மு தொடர்ச்சியான வலிமையை பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் எனவும் அண்ணாமலை தனது பதிவில் கூறியுள்ளார்.
















