இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்த முதல் தனியார் ராக்கெட் `விக்ரம் – 1′ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன குழுவினருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, விக்ரம்-1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விக்ரம்-1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பெருமை உச்சத்திற்கு சென்றுள்ளதாகவும், இது இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி என்றும் கூறினார்.
இன்றைய “மிஷன் ஆகமன்” மேலும் தொடர வேண்டும் எனவும், நாம் தற்சார்பு அடைய முடியும் என்பதை இந்தத் திட்டம் நிரூபிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தம்மை சந்திக்க வரும்படி விக்ரம் 1 ராக்கெட் குழுவினருக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, தாம் எழுதிய வந்தே மாதரம் குறித்த கடிதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
















