காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு ஊக்கத் தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்காட்லாந்தில் நடைபெறும் 3-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும் எனக்கூறியுள்ள முதலமைச்சர் விஜய், ராஜா முத்துப்பாண்டி மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
















