திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் - பட்ஜெட்டில் அறிவிப்பு!
Aug 5, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 5, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு, 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தொழில் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக 16 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதநீர், பனங்கருப்பட்டி உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பனைப் பொருட்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டு, பனை விவசாயிகளின் வாழ்வாதாரமும் வருமானமும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பூரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படுவதுடன், கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த் துறையின் வளர்ச்சிக்காக ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சிக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்காக நடப்பாண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4 ஆயிரத்து 414 கோடி ரூபாயும்,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2 ஆயிரத்து 142 கோடி ரூபாயும், ஜவுளித் துறைக்கு 60 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் வளர்ச்சிக்காக மொத்தம் 398 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் புதுமையான தொழில் முனைவுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: vijay tamil nadu budgettamil nadu budget speechtamil nadu budget sessiontamil nadu budget 2026 livetamil nadu budget 2026 2027finance budget tamil nadutamil nadu budget speech livetamil budgettamil nadu budget highlightsTamil Nadu budgettamil nadu budget livetamil nadu budget 2026
Share
Tweet
SendShare
Previous Post

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Related News

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies