ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழா, இராமேசுவரம் பேரூந்து நிலையம் எதிரே உள்ள திடலில் நாளை நடைபெறுகிறது.
இவ்விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என மக்கள்’ பாத யாத்திரையைத் தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை 4.50 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 5 மணிக்கு மண்டபம் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் இ ராமேசுவரம் செல்லும் அவர், அங்குள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் மாலை 5.45 மணி அளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார்.
இராமேஸ்வரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ‘இராமேஸ்வரத் தீர்மானங்கள்’ என்ற பெயரில், தமிழக பாஜக எந்த திசை , எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் , எப்படியான வெற்றியைப் பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் கூடிய தீர்மானங்கள் வெளியிடப்படுகிறது.
இந்த பாத யாத்திரையின் போது ,1 கோடி குடும்பங்களுக்கு அண்ணாமலையின் கடிதம் அனுப்பப்பட உள்ளன என்பதுவும், தமிழ்தாயின் சிலை வைக்க தமிழகம் முழுவதும் நடைபயணம் செல்லும் ஊர்களில் புனித மண் சேகரிக்கப்படும், என்பதுவும் குறிப்படத் தக்கது.